முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் போட்டியிடும் தொகுதி தெரியுமா? காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்!!
காங்கிரஸ் வெளியிட்டுள்ள 4வது பட்டியலில் 46 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரி – கே. கோபிநாத், கரூர் – ஜோதிமணி, கடலூர் – எம்.கே. விஷ்ணு பிரசாத், சிவகங்கை – கார்த்தி சிதம்பரம், விருதுநகர் – மாணிக்கம் தாகூர், கன்னியாக்குமரி – விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. 7 வேட்பாளர்களில் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு மீண்டும் காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில் முக்கியமான வேட்பாளாராக பார்க்கப்படுகிறார். இவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மேலும், காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.