தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலக்கான உத்தேச வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று காலை 7 மணி முதல் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாநகராட்சி வார்டுகள் 1,369, நகராட்சி வார்டுகள் 3,824 ,பேரூராட்சி வார்டுகள் 7409 என மொத்தம் 12,602 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் உத்தேச வாக்குப்பதிவு நிலவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேலும்,மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தம் 52.22% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதைப்போல்,நகராட்சி பகுதிகளில் மொத்தம் 68.22% வாக்குகளும், பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 74.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.