அரசு கலைக் கல்லூரிகளில் சேரணுமா…? தேதியுடன் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நேற்று வரை 77,984 மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் என்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் இருக்கக்கூடிய இடங்கள் போதுமானதாக இல்லை என்பதினால் அதிகரிக்கப்படுகிறது என்றார். மேலும், சுயநிதி கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரிக்கலாம்.
திருச்சி பெரியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து என்பது தவறான தகவல் என்றும் கூறினார். இதனிடையே, தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி திறக்கப்படும் என நேற்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.