Categories: தமிழகம்

குடிபோதையில் வந்த அரசு மருத்துவர் மருத்துவமனையிலேயே மட்டையான சம்பவம்… துறை ரீதியான நடவடிக்கைக்கு சிபாரிசு..!!

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர் போதையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்-மோகனுார் சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மட்டும்மால்லாமல், கரூர், திருச்சி மாவட்டங்களில் இருந்தும் தினமும் 1000க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுக்கும் முன் தமிழகத்திலேயே சிறந்த மருத்துவமனை என நாமக்கல் மருத்துவமனை தரச்சான்றும் பெற்றுள்ளது. அடித்தட்டு மக்கள் நிறைந்த பகுதி என்பதால் மக்கள் அனைவரும் இந்த மருத்துவமனையில்தான் எந்த பிரச்னை என்றாலும், சிகிச்சை எடுக்க வந்து போகிறார்கள். இந்த சூழலில்தான், இந்த மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் மருத்துவராக பணியாற்றும் சிவானந்தம் என்பவர் நேற்று அளவுக்கதிகமாக மது குடித்துவிட்டு போதை தலைக்கேறி மயங்கினார்.

இந்த சம்பவம் நோயாளிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை ஊழியர்கள் சிலர் கைதாங்களாக தூக்கிவந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ரோ அறைக்கு அருகே உள்ள மக்கள் சேவை மையம் அறையில் படுக்க வைக்கப்பட்டு சென்றனர். நீண்டநேரம் போதையில் இருந்த அவர் மாலையில் எழுந்து சென்றதாக கூறப்படுகிறது. அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் குடிபோதையில் மயங்கிக்கிடந்தது, மற்ற மருத்துவர்களையும், ஊழியர்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை டீன் சாந்தா அருள்மொழி கூறுகையில், ” மருத்துவர் சிவானந்தம் பணி நேரத்தில் போதையில் இருந்தது குறித்து, மருத்துவத் துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பர்,” என்றார்.

KavinKumar

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

9 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

9 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

11 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

11 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

12 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

12 hours ago

This website uses cookies.