கோவை : கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சல் பரவாமல் தடுக்க கோவை – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலின் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும் இந்த காய்ச்சல், சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுத்துகிறது.
இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு, உடல்வலி, சோர்வு, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல், முகத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் தமிழக – கேரளா எல்லைப்பகுதியான வாளையார் பகுதிகளில், காய்ச்சல் அறிகுறிகளுடன் வருவோரிடம் கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நோய் எளிதில் சரியாகி விடும் என தெரிவிக்கும் கேரளாவை சேர்ந்த நபர் யாரும் அச்சப்பட தேவையில்லை,” என்றார்.
தொடர்ந்து கோவையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
This website uses cookies.