வேலூர் அருகே சாலையோரம் உள்ள தடுப்பு கம்பிகளின் இடையே சிக்கிக் கொண்ட நாயை பொதுமக்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த கெங்கையம்மன் கோவில் பகுதியில் உள்ள பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் பைபாஸ் சாலையில் இருபுறமும் தடுப்பு கம்பிகள அமைக்கப்பட்டு உள்ளது.
இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் சாலையை கடக்க முயன்ற நாய் ஒன்று தடுப்புக் கம்பிகளின் இடைவெளியில் நுழைந்து செல்ல முயன்றுள்ளது.
அப்போது அது தடுப்பு கம்பிகளின் இடையில் சிக்கி நீண்ட நேரமாக கத்தியுள்ளது. இதனை பார்த்த பொது மக்கள் கம்பிகளை வளைத்து இடைவெளியை அதிகமாக்கி நாயை பத்திரமாக மீட்டனர். பின்னர் மீட்கப்பட்டதும் நாய் அங்கிருந்து மெதுவாக நடந்து சென்றது. நன்றியுள்ள ஜீவனிடம் மனிதத்தை வெளிப்படுத்திய மனிதர்கள்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.