“லேப்டாப் எல்லாம் கேட்காதீர்கள் பள்ளிக்கு என்ன தேவையோ கேளுங்கள்” என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை சின்னமலையில் அமைந்துள்ள மடுவின்கரை மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மண்டலம் 13 குழு தலைவர் துரைராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரிய ராஜன் அவர்கள், அமர்ந்திருந்த மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்பொழுது மாணவர்கள் நன்றாக படிக்கிறீர்களா..? எனவும், தங்களுக்கு என்ன வசதி வேண்டும் என பல்வேறு வினாக்களை எழுப்பினார். அதற்கு மாணவர்கள் பதில் அளித்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் ஒரு மாணவன் லேப்டாப் எப்பொழுது வழங்குவீர்கள் என்று கேட்டதற்கு, ‘லேப்டாப் எல்லாம் இப்போது வேண்டாம், பள்ளிக்கு என்ன தேவையோ, அதை முதலில் கேளுங்கள்,” என்று பதில் அளித்தார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.