அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது என மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு தலைவர் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநில கல்விக் கொள்கை தொடர்பாக மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் திருச்சி புதுக்கோட்டை பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை உயர் மட்ட குழுவினரிடம் கூறினர்.
இக்கூட்டத்தில் பேசிய அரசு பள்ளி மாணவர் : கல்விக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும்.
தயவு செய்து PET பீரியடில் பாடம் நடத்தாதீங்க, அனைத்து பள்ளிகளிலும் பீட்டி பீரியடில் விளையாடுவதற்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதேபோல் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தற்போது தொடக்கப் பள்ளியில் வழங்கும் சிற்றுண்டி திட்டத்தை உயர்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.
இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்பாக அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் ஒருவர் கேட்டதற்கு : உயர் மட்டக் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் அதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை, அது அவர்களது சொந்த விருப்பம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.