Categories: தமிழகம்

நோட்டா கூட போட்டி போடும் கட்சியுடன் திமுகவை ஒப்பிடாதீர்கள் : பாஜகவை சீண்டிய அமைச்சர் செந்தில்பாலாஜி!!

மின்சார கட்டணத்தில் சிறு குறு தொழில் முனைவோரின் கோரிக்கையை ஏற்று பரிசீலனைக்கு பின் பிக்சிடுட் சார்ஜ், டிமாண்ட் சார்ஜ் விலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் நாளை ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த ஏற்பாடுகளை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இந்த மின் கட்டண உயர்வு குறித்து சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் மின் கட்டண விலையை குறைப்பதற்கான கோரிக்கையை முன் வைத்துள்ளதாக தெரிவித்த அவர் முதல்வரின் உத்தரவிற்காக மின்சார துறை அதற்கான பரிசீலனை மேற்கொண்டு பிக்சிடு சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ்களில் விலை மாற்றம் செய்து ஒழுங்கு முறை ஆணையம் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யும் என தெரிவித்தார்.

மேலும் நாளை கோவைக்கு வருகை தர உள்ள முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பயனாளிகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பும் இல்லாத அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மின் கட்டணங்களில் ஏதேனும் சலுகைகள் தரப்படுமா என்று கேள்விக்கு பதில் அளித்த அவர் இழப்புகளை சரி செய்யக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சலுகைகள் தரக்கூடிய அளவிற்கு மின்சார வாரியம் தற்பொழுது உள்ளதா என யோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வீடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு மட்டும் விலை குறைப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் திமுக? பாஜக? என்ற நிலைமை ஏற்பட்டு வருவதாக கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் நோட்டாவுடன் போட்டியிடுபவர்களை தங்களுடன் ஒப்பிட வேண்டாம் என தெரிவித்தார்.

மேலும் அவர்கள் கோவையில் எந்த ஒரு வார்டிலும் ஜெயிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர் அவர்களை எங்களுடன் ஒப்பிடுவதா எனவும் இல்லாதவர்களை(பாஜக) இருக்கின்றது போல் செய்திகளும் ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் தான் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

1 hour ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

2 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

3 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

3 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

4 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

4 hours ago

This website uses cookies.