Categories: தமிழகம்

அண்ணாமலை சொல்றது எல்லாம் கண்டுக்காம இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டிருங்க : அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சனம்!

அண்ணாமலை சொல்றது எல்லாம் கண்டுக்காம இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டிருங்க : அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சனம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கர்த்தநாதபுரம் பகுதியில் பாமணி ஆற்றின் குறுக்கே 3.79 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தொடங்கி வைத்தார். பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வருகை தந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு பொதுமக்கள் மலாகள் வீசி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியதாவது, திராவிட மாடல் ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமல்லாமல் மன்னார்குடியில் தொடர்ந்து மின்னி வருகிறது, மன்னார்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கர்த்தநாதபுரம் பாலம் பல ஆண்டுகால கோரிக்கை, பத்து ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று, பாலம் கட்ட இங்கு உள்ள 64 வீடுகள் இடித்து கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்த போது, அதனை தவிர்த்து சரியான முறையில் திட்டமிடப்பட்டு இரு வழி சாலையை ரூ 3 கோடி 79 லட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடியில் இந்த பாலம் அமைகிறது. இந்திய கூட்டணி மட்டும்தான் தற்போது வலுவாக உள்ளது.

எதிரணியில் கதவு ஜன்னல் திறந்து வைத்தும் யாரும் கூட்டணிக்கு போகவில்லை, காற்று தான் வருகிறது, மக்கள் ஒரு முடிவில் இருக்கும் போது தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும் போது, இவி மிஷின் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் இருக்கிறது. இருந்தாலும் அதனை சரி செய்ய பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

எது எப்படி இருந்தாலும் தமிழகத்தில் 39 இடங்களும் பாண்டிச்சேரியில் ஒரு இடமும் சேர்த்து 40 இடங்களில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

ரோட்டில் சிறு குழந்தை விளையாடும் போது கடந்து செல்வது போல் பாஜக அண்ணாமலை போன்றோர் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்வதை கடந்து செல்ல வேண்டும், நமக்கு மக்கள் பணி, தமிழக வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை உலக தரத்திற்கு கொண்டு செல்வதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

தஞ்சையில் அற்புதமான சிப்காட் அமையவிருக்கிறது, திருவாரூரில் சிறிய அளவிலான தொழில் பூங்கா அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

6 minutes ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

11 minutes ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

54 minutes ago

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

2 hours ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 hours ago

திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…

3 hours ago

This website uses cookies.