Categories: தமிழகம்

அண்ணாமலை சொல்றது எல்லாம் கண்டுக்காம இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டிருங்க : அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சனம்!

அண்ணாமலை சொல்றது எல்லாம் கண்டுக்காம இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டிருங்க : அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சனம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கர்த்தநாதபுரம் பகுதியில் பாமணி ஆற்றின் குறுக்கே 3.79 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தொடங்கி வைத்தார். பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வருகை தந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு பொதுமக்கள் மலாகள் வீசி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியதாவது, திராவிட மாடல் ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமல்லாமல் மன்னார்குடியில் தொடர்ந்து மின்னி வருகிறது, மன்னார்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கர்த்தநாதபுரம் பாலம் பல ஆண்டுகால கோரிக்கை, பத்து ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று, பாலம் கட்ட இங்கு உள்ள 64 வீடுகள் இடித்து கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்த போது, அதனை தவிர்த்து சரியான முறையில் திட்டமிடப்பட்டு இரு வழி சாலையை ரூ 3 கோடி 79 லட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடியில் இந்த பாலம் அமைகிறது. இந்திய கூட்டணி மட்டும்தான் தற்போது வலுவாக உள்ளது.

எதிரணியில் கதவு ஜன்னல் திறந்து வைத்தும் யாரும் கூட்டணிக்கு போகவில்லை, காற்று தான் வருகிறது, மக்கள் ஒரு முடிவில் இருக்கும் போது தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும் போது, இவி மிஷின் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் இருக்கிறது. இருந்தாலும் அதனை சரி செய்ய பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

எது எப்படி இருந்தாலும் தமிழகத்தில் 39 இடங்களும் பாண்டிச்சேரியில் ஒரு இடமும் சேர்த்து 40 இடங்களில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

ரோட்டில் சிறு குழந்தை விளையாடும் போது கடந்து செல்வது போல் பாஜக அண்ணாமலை போன்றோர் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்வதை கடந்து செல்ல வேண்டும், நமக்கு மக்கள் பணி, தமிழக வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை உலக தரத்திற்கு கொண்டு செல்வதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

தஞ்சையில் அற்புதமான சிப்காட் அமையவிருக்கிறது, திருவாரூரில் சிறிய அளவிலான தொழில் பூங்கா அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் டிவி பிரபலத்துக்கு அரிய வகை நோய்… உடல் மெலிந்த போடோ வைரல் : நடிகை கண்ணீர்!

விஜய் டிவியில் பாப்புலரான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பவித்ரா லட்சுமி. இவர் நாய் சேகர் உள்ளிட்ட…

13 minutes ago

தெருநாயை எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து?- பிக்பாஸ் அமீரை கேவலப்படுத்திய வளர்ப்பு தந்தை!

பிக்பாஸ் ஜோடி பிரபல சின்னத்திரை நட்சத்திரமான பாவனி “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோதுதான் முதன்முதலாக அமீரை…

17 minutes ago

பெரியப்பா பாட்டுலலாம் ஒன்னும் இல்ல? எல்லாமே பொய்- இளையராஜாவை வம்புக்கு இழுக்கும் பிரேம்ஜி?

இழப்பீடு கேட்ட இளையராஜா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் ஆங்காங்கே பல காட்சிகளில்…

1 hour ago

இரட்டை இலை கீழே… தாமரை மேலே : பாஜக தலைவரின் புது விளக்கத்தால் சலசலப்பு!

சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, செந்தில் பாலாஜியின் செய்தியை திசை…

1 hour ago

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்த தடையில்லை : அதிரடி தீர்ப்பு!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை…

1 hour ago

காஷ்மீரில் கொத்து கொத்தாக சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை : எந்த மதம் என கேட்டு சுட்ட தீவிரவாதிகள்..!

காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா…

2 hours ago

This website uses cookies.