Categories: தமிழகம்

வாழத்தான் விடல.. எங்களை சாக விடுங்கள் : திமுக கவுன்சிலரை கண்டித்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற தனியார் விடுதி உரிமையாளர்!!

திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க கவுன்சிலர் லஞ்சம் கேட்பதாக கூறி தனியார் விடுதி உரிமையாளர் மனைவியுடன் நகராட்சி அலுவலகமும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் திமுக நகரச்செயலாளர் வாள்சுடலையின் தம்பி கீழ வீர ராகவபுரம் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் டோல்கேட் அருகே விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் ராமகிருஷ்ணனின் விடுதிக்கு பாதாள சாக்கடைதிட்டத்தில் இணைப்பு வழங்க நகராட்சி 5-வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாரகர் மற்றும் நகராட்சி நிர்வாகம் ரூ 5-லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறி விடுதி உரிமையாளர் ராமகிருஷ்ணன் தனது மனைவி சண்முகசுந்தரி உடன் நகராட்சி அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முன்றார்.

அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதயனைடுத்து நகராட்சி அலுவலம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் நகரராட்சி நிர்வாகம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையர் வேலவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தனியார் விடுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட போது ராமகிருஷ்ணன்
விதிமுறைகளை மீறி விடுதியில் கழிவறைகளை கட்டி கழிப்றை கழிவுகளை சாலையில் திறந்தவெளியியில் விடுவது தெரியவந்ததையடுத்து விடுதியிலிருந்த கழிப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் முறையான அனுமதியின்றி விடுதி கட்டப்பட்டுள்ளதாக விடுதியிலிருந்து பாதாள சாக்கடை திட்டத்திற்கு செல்லும் கழிவு நீர் இணைப்புகளையும் நகராட்சி நிர்வாகம் துண்டிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விடுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க கேட்டு ராமகிருஷ்ணன் நகராட்சியில் பணம் கட்டியுள்ளார். ஆனால் அவரது விடுதி முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதால் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருதலாலும் பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டித்ததாக நகராட்சி ஆணையர் வேலவன் தெரிவித்தார்.

இந்த நிலையில் விடுதிக்கு பாதாளை சாக்கடை இணைப்பு வழங்க திமுக கவுன்சிலர் லஞ்சம் கேட்பதாக கூறி திமுக நகர செயலாளரின் தம்பி நகராட்சி அலுவலகமும் மனைவியுடன் தீக்குளித்து தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

10 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

10 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

11 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

13 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

14 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

15 hours ago

This website uses cookies.