சிகிச்சைக்கு உண்டான செலவை தான் பார்த்துக்கொள்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியள்ளார்.
விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ விக்ரம், சூர்யா நடித்த ‘பிதாமகன்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ உள்பட ஒரு சில படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வறுமையின் காரணமாக தவித்து வருவதாகவும் நீரிழிவு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார்.
தற்போது அவரது நண்பர்கள் அவரை ஒரு வீட்டில் தங்க வைத்து, தேவையான உதவிகள் செய்து வருவதாகவும் இருப்பினும் தனது சிகிச்சைக்கு அதிகம் பணம் தேவைப்படுவதால் திரையுலகினர் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தயாரிப்பாளர் விஏ துரையின் மருத்துவச் செலவுக்காக நடிகர் சூர்யா, கருணாஸ் உள்ளிட்டோர் 2 லட்சம் வழங்கினார்.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரிய தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
எதற்கும் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் சந்திப்பதாகவும் ரஜினிகாந்த் அவரிடம் கூறியுள்ளார். மருத்துவசிகிச்சைக்காக நடிகர் ராகவா லாரன்ஸும் ரூ 5. லட்சம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.