Categories: தமிழகம்

பிரபல துணை நடிகை வீட்டில் இரட்டை கொலை : நடிகையின் கணவர், மகள் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்!!

சென்னை மாங்காடு, அடிசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தி. இவர் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

இவரது கணவர் செல்வராஜ் (65), இசை பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு பிரியா (38) என்ற மகளும், ராஜேஷ், பிரகாஷ் என இரு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரியாவின் வீட்டுக்குச் சென்ற பிரகாஷ் அங்கு தனது அக்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவை குத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது.

இதில் பிரியா இறந்தார். இதையறிந்து அவரது தாய் மற்றும் அண்ணன் சம்பவ இடத்துக்கு வந்தனர். தனது தந்தையை காணவில்லை என வீட்டில் சென்றுபார்த்தபோது செல்வராஜ் படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

தகவறிந்து சென்ற மாங்காடு போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அதே பகுதியில் சுற்றித்திரிந்த பிரகாஷை கைது செய்து விசாரித்தனர். இதில் பிரகாஷ் சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்து வந்ததாகவும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர் அடிக்கடி வீட்டில் பெற்றோர், அக்காவிடம் சண்டை போட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில்தான் நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தையை கொலை செய்துவிட்டு அதன்பிறகு அக்கா வீட்டுக்குச் சென்று அவரையும் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

விசாரணையில் பிரகாஷ் மதுவுக்கு அடிமையாகி மனநோயாளி போல் மாறியதாக கூறப்படுகிறது. இதற்காக பல லட்சங்கள் செலவழித்து சிகிச்சையும் பார்த்துள்ளனர்.

ஆனால் கொஞ்ச நாள் நன்றாக இருந்த பிரகாஷ், மீண்டும் மதுவை தொட ஆரம்பித்து, மூர்க்கனாக மாறி தந்தை மற்றும் சகோதரியை கொலை செய்தது தெரியவந்தது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

22 minutes ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

37 minutes ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

53 minutes ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

2 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

3 hours ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

3 hours ago

This website uses cookies.