அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பெரிய வளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி மற்றும் மலர்விழி ஆகியோர் தைலமரக்காட்டில் காளான் பறிக்கச் சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில், இருவரும் கத்தியால் குத்தப்பட்டு, காட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கழுவந்தோண்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி முயல் வேட்டைக்கு பால்ராஜ் சென்றதாகவும், அப்போது, புதரின் நடுவில் காளான் பறித்துக் கொண்டிருந்த மலர்விழியை முயல் என நினைத்து சுளிக்கி ஆயுதம் மூலம் பால்ராஜ் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.
பால்ராஜ் கத்தியால் மலர்விழியை குத்தியதைப் பார்த்த கண்ணகி சத்தம் போட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பால்ராஜ், கத்தியால் கண்ணகியையும் குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முயல் என நினைத்து பெண் கொலை செய்யப்பட்டதை மறைக்க மற்றுமொரு கொலையை அரங்கேற்றியது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.