முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பியை கொலை செய்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஆர்ப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது மகன் மதன் (22), மற்றொரு மகன் ஸ்ரீதர்ராஜா (20) ஆகியோரை அதே ஊரை சேர்ந்த ருக்குன் பாட்ஷா, அவரது மகன்கள் மன்சூரலிகான், மர்ஜித் அலிகான் மற்றும் உறவினர் ராஜ் முகமது ஆகிய நால்வரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக, கடந்த 12.5.2013 அன்று படுகொலை செய்தனர். இது தொடர்பாக கொரடாச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேற்கண்ட நால்வரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், அமர்வு நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். அதன்படி, ருக்குன்பாட்ஷா, அவரது மகன் மர்ஜித் அலிகானுக்கு ஆயுள் தண்டனையும், மற்றொரு மகனான மன்சூர் அலிகானுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், உறவினர் ராஜ் முகம்மதுவுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இந்த நான்கு நபர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்
தண்டனை வழங்கப்பட்ட நால்வரும் உடனடியாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த நான்கு பேரின் உறவினர்களும் அதேபோன்று கொலை செய்யப்பட்ட இரண்டு நபர்களின் உறவினர்களும் நீதிமன்ற வாசலில் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது. இன்று தீர்ப்பு வழங்கும் நிலையில் காவல்துறையினர் ஏராளமானோர் நீதிமன்ற வாசலில் குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.