வேலூர் : தாய் மற்றும் சகோதரியை கொலை செய்த கூலித்தொழிலாளி முனிராஜூவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள பூசாரி வலசை கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனிராஜ் (வயது 50). இவரது தாய் இந்திராணி (வயது 70) மற்றும் சகோதரி சின்னம்மா (வயது 42). இவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்த முனிராஜ் கடந்த 2020 ஆம் ஆண்டு தாய் இந்திராணி மற்றும் சகோதரி சின்னம்மாவை உருட்டு கட்டையால் தாக்கியதுடன் கட்டுகல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
இதனை தடுக்க சென்ற தம்பி தினேஷையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்த வழக்கு பரதராமி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டணையும் தம்பியையும் தாக்கி படுகாயமடைய செய்ததற்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதன் அடிப்படையில் முனிராஜ் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
This website uses cookies.