தாய், மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஆறுமுகம் மகன் பழனியப்பன் (வயது 54). கட்டிட பொறியாளரான இவருக்கு கரூரில் ஆசிரியராக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் வேந்தன்பட்டியில் தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்துவந்த தாயார் சிகப்பிக்கு (வயது 75) இரவு உணவு வழங்க அங்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது.
காலை கட்டிடப்பணிக்காக சென்ற தொழிலாளர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்குவந்த போலீசார் கதவு பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது தாயும்,மகனும் இறந்தநிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை சேகரித்தபின் கதவை உடைத்து சென்று பார்த்தபோது தலையில் பலமாக தாக்கப்பட்டு பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சென்று கொலைச்சம்பவத்தை பார்வையிட்டு பழனியப்பன் குடியிருந்த வீட்டினையும் பார்வையிட்டார்.
அப்போது பழனியப்பன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, கேமரா காட்சி சேகரிப்பு பாகங்களும் கொலையாளிகளால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
மேலும் அந்த வீட்டிற்குள் இருந்த பிரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததுள்ளது. நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் காவல் காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் கட்டிடத்தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பழனியப்பன் வைத்திருந்த பணத்தையும் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க இக்கொலைச்சம்பவம் நடைபெற்றுளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
…இணையத்தில் வைரலான ஆபாச டிஜிட்டர் விளம்பர பலகையை நீக்கம் செய்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
This website uses cookies.