தாய், மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஆறுமுகம் மகன் பழனியப்பன் (வயது 54). கட்டிட பொறியாளரான இவருக்கு கரூரில் ஆசிரியராக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் வேந்தன்பட்டியில் தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்துவந்த தாயார் சிகப்பிக்கு (வயது 75) இரவு உணவு வழங்க அங்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது.
காலை கட்டிடப்பணிக்காக சென்ற தொழிலாளர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்குவந்த போலீசார் கதவு பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது தாயும்,மகனும் இறந்தநிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை சேகரித்தபின் கதவை உடைத்து சென்று பார்த்தபோது தலையில் பலமாக தாக்கப்பட்டு பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சென்று கொலைச்சம்பவத்தை பார்வையிட்டு பழனியப்பன் குடியிருந்த வீட்டினையும் பார்வையிட்டார்.
அப்போது பழனியப்பன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, கேமரா காட்சி சேகரிப்பு பாகங்களும் கொலையாளிகளால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
மேலும் அந்த வீட்டிற்குள் இருந்த பிரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததுள்ளது. நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் காவல் காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் கட்டிடத்தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பழனியப்பன் வைத்திருந்த பணத்தையும் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க இக்கொலைச்சம்பவம் நடைபெற்றுளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
…இணையத்தில் வைரலான ஆபாச டிஜிட்டர் விளம்பர பலகையை நீக்கம் செய்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.