சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொட்டுகாரம்பட்டி கிராமத்தில் வரதன் என்பவருக்கு சுமார் 2 அரை ஏக்கர் நிலம் உள்ளது
இதில் தந்தை வரதன், மகள் மணவள்ளி உள்ளிட்டோருக்கும் சகோதரன் லவகிருஷ்ணனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில் நீதிமன்றம் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரதன் மற்றும் மனவள்ளிக்கு சாதகமாக தீர்ப்பு ஆகி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன் சொத்தை தனது பேருக்கு எழுதித் தரும்படி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தங்கள் அனுபவத்தில் உள்ள அந்த இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் அனுபவச் சான்று பெறுவதற்காக இன்று காத்திருந்த நிலையில் அங்கு வந்த லவகிருஷ்ணன் அவர்கள் இருவரையும் தலை கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக வெட்டி கொலை செய்தார்.
தொடர்ந்து அங்கிருந்த ஊர் மக்களிடம் தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர் மற்றும் ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து அங்கு வந்த லவகிருஷ்ணன் நான் தான் எனது அப்பாவையும் தங்கையையும் கொலை செய்தேன் என்று கூறி சம்பவ இடத்திலேயே காவல்துறையிடம் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.