கரூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை NGGO காலணியில் வசிப்பவர் சிவா (என்கின்ற) செல்வராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு சத்யா என்கின்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சத்யாவும் கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவர் மனைவியிடம் அடிக்கடி சண்டையிடுவதை வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கட்டிட வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சத்தியாவிடம், அவரது கணவர் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, கணவர் வீட்டில் காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்தியாவை விட்டு விட்டு, அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் தனது மூத்த மகனிடம் , அம்மாவை கத்தியால் குத்தி விட்டதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி சொல்லி விட்டு சென்று விட்டார்.
இதனையடுத்து, வீட்டிற்கு வாடகை ஆட்டோவை உடன் கூட்டிச் சென்ற மகன், தாய் சத்யாவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள சிவா என்கின்ற செல்வராஜ் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் சிறைக்கு சென்று தண்டனை குற்றவாளி என்றும், மேலும் வழக்குகள் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் அவர் மீது உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.