Categories: தமிழகம்

திருமணமாகி ஒரே மாதத்தில் வரதட்சணை கொடுமை.. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் : நீதி கேட்டு காவல்நிலையம் முற்றுகை!!

கரூர் : திருமணமாகி ஒரு மாதம் கூட இல்லை, அதற்குள் பெண் சித்திரவதை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கரூர் காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு நீதி கேட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

சேலம், அஸ்தம்பட்டி பகுதியினை சார்ந்தவர், பிரேம், இவரது சகோதரியினை கடந்த ஜூன் 3 ம் தேதி அன்று கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியினை சார்ந்தவர் மாணிக்கம் மகன் விக்னேஷ் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், திருமணமான நாளிலிருந்தே, தினம் தோறும் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சகோதரர் பிரேம், சகோதரி பிரபாவதி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க, உடனே, க.பரமத்தியில் புதிதாக முதல்வர் கையால் திறந்து வைக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்த போது அங்கு கம்யூட்டர் இல்லை, பேப்பரும் இல்லை, ஒரே ஒரு டேபிளும், ஒரே ஒரு சேரும், பெண் போலீஸ் ஒருவரும் தான் உள்ள நிலையில், இன்று காலை கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மீண்டும் அளிக்கப்பட்டதையடுத்து , வரதட்சனை கொடுமை செய்த குடும்பத்தினை அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் விசாரணை செய்தும் அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் முன்பு திடீரென்று அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொறுப்பேற்ற நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால், காணொளியில் திறக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரே ஒரு டேபிளும், ஒரே ஒரு சேரும், ஒரே ஒரு பெண் போலீஸ் மட்டுமே உள்ள நிலையில் எழுதுவதற்கு கூட எந்த ஒரு உபகரணங்களும் இல்லாத நிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துறை உள்ளது கவலைக்குள்ளான விஷயம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

10 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

12 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

13 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

13 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

14 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

15 hours ago

This website uses cookies.