Categories: தமிழகம்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… திருமணமாகி 11 மாதங்களில் நடந்த சோகம் ; கூண்டோடு சிக்கும் கணவன் குடும்பத்தினர்..!!!

பொன்னேரி அருகே திருமணமாகி 11மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத் தொடர்ந்து, மணமகனின் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேகர் – முத்துலட்சுமி தம்பதியரின் மகள் தனலட்சுமி (20). இவருக்கும் சிறுவாக்கம் சானார்பாளையத்தை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. தனலட்சுமியை அவரது கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக தமது பெற்றோரிடம் அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார்.

தன்னை வீட்டிற்கு அழைத்து சென்று விடுமாறு பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அவரது பெற்றோரும் தங்களது மகளை சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று தனலட்சுமி கணவர் குடும்பத்தினர் அவரது தந்தைக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். சிறிது நேரத்தில் உங்களது மகள் இறந்து விட்டதாக மீண்டும் போன் செய்து கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த சேகர் மகளின் கணவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது மகளது சடலத்தை வைத்துள்ளனர்.

இதனையடுத்து தமது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பொன்னேரி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தன லட்சுமிக்கு 20 சவரன் நகை அணிவித்து திருமணம் செய்த நிலையில், மேலும் 5 சவரன் நகை பணம் கேட்டு வரதட்சணை கேட்டு, அவரை கொடுமைப்படுத்தி கொலை செய்ததாகவும், முரளி கிருஷ்ணனின் தாய் சிவகாமி மற்றும் அவரது தந்தை பழனி உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த பொன்னேரி போலீசார் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, அங்கிருந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

19 minutes ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

16 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

17 hours ago

This website uses cookies.