காஞ்சிபுரம் : வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதால் விவசாயிகள் வேதனை வேதனையடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தில் வசித்து வருகின்றனர். இங்கு உணவகங்கள், வணிக நிறுவனங்கள் அதிக அளவு உள்ளது. இந்த பேரூராட்சி அருகே பாலாறு செல்கிறது. பேரூராட்சி நிர்வாகம் பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை பாலாற்றில் நேரடியாக கலப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சுத்திகரிப்பு செய்து பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், பாலாற்றில் நேரடியாக கலக்கப்படும் கழிவு நீரால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசு அடைவதாகவும் அப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே பேரூராட்சி பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை மாற்று பாதையில் கொண்டு செல்ல பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.