Categories: தமிழகம்

மறுபடியும் முதல்ல இருந்தா? வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் : ஒரு டிஎன்ஏ கூட ஒத்துப்போகாதததால் அதிருப்தி!

மறுபடியும் முதல்ல இருந்தா? வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் : ஒரு டிஎன்ஏ கூட ஒத்துப்போகாதததால் அதிருப்தி!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் திறக்க தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் 189 நபர்களிடம் விசாரணை செய்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்

மேலும் இந்த நபர்களில் 39 நபர்களை சந்தேகப்பட்டு அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை நீதிமன்ற அனுமதி பெற்று புதுகோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.

சோதனை முடிவுகளுக்காக பகுப்பாய்வு மையத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி சி பி சி ஐ டி போலீசார் அனுப்பினர். இதற்கிடையில் கடந்த ஒரு வருடமாக இந்த வழக்கு தொடர்பாக எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால் பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசின் சிபிசிஐடி போலீசாரையும் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்ட 31 நபர்களில் 10 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் 31 நபர்களிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் முத்திரையிடப்பட்டு சிபிசி போலீசார் மற்றும் நீதிமன்றத்திற்கு பகுப்பாய்வு மையம் அனுப்பியுள்ளது

இதில் சம்பவத்தன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த நீரையும் மாதிரி எடுத்து சோதனை செய்யப்பட்டது இந்த சோதனை மாதிரி முடிவுகளும் 31 நபர்களிடம் எடுக்கப்பட்ட டி என் ஏ ரத்த மாதிரி பரிசோதனை முடிவும் ஒத்துப் போகவில்லை என்ற தகவல் வெளியாகிறது இதனை சிபிசிஐடி எஸ் பி தில்லை நடராஜன உறுதி செய்தார்.

ரத்த மாதிரி பரிசோதனை ஒத்துப் போகாமல் முடிவுகள் வந்துள்ளது சிபிசிஐடி போலீசாருக்கு இந்த வழக்கில் திடீர் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விசாரணையை மீண்டும் மறுபடியும் முதலில் இருந்து சி பி சி ஐ டி போலீசார் விசாரணை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

14 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

14 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

15 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

15 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

16 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

16 hours ago

This website uses cookies.