சென்னை: பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் இருந்து செல்லும் குடிநீர் குழாய் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் NH4 சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது குடிதண்ணீர் குழாய் உடைப்பெடுத்து பெருக்கெடுத்து வீணாகி வருகிறது.
இன்று இரவு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழியாக திருவள்ளூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு ஓய்வெடுக்க வரும் நிலையில் உடைப்பு எடுத்த குழாயை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கொளுத்தும் கோடை வெயில் குடிதண்ணீர் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அவதியுற்று வரும் சூழலில் அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலைப் பணிகளை விரிவாக்கம் செய்த போது ராட்சச பைப் லைனில் உடைத்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
உடனடியாக குழாயை சீரமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.