விழுப்புரம் : பெட்ரோல் நிரப்பிய வாகனத்திற்கு பணம் கேட்டதால் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விழுப்புரம் அடுத்துள்ள முண்டியம்பாக்கம் அருகே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த ராகுல் (வயது 19) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 23) என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.
இதனை அடுத்து ஊழியர் ராகுல் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜய் பெட்ரோல் பங்க் ஊழியர் ராகுலை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் ராகுல் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணம் கேட்டதற்கு பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.