விழுப்புரம் : குடிபோதையில் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 17). இவன் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறன்.
கடந்த சில தினங்களாகவே பள்ளிக்கு வரும் மாணவிகளை கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளான். இந்நிலையில்,அப்பள்ளியின் தலைமையாசிரியர் சேவியர் சந்திரசேகர் மாணவனை அழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்த நாளன்று குடிபோதையில் பள்ளிக்கு வந்த விக்னேஷ் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று அவரை தலையில் தாக்கி காயப்படுத்தி உள்ளான்.
படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவத்தை அறிந்த கண்டமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் பள்ளி மாணவன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளான்.
ஏற்கனவே அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்க பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பள்ளி மாணவன் போதையில் தலைமையாசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.