விழுப்புரம் : குடிபோதையில் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 17). இவன் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறன்.
கடந்த சில தினங்களாகவே பள்ளிக்கு வரும் மாணவிகளை கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளான். இந்நிலையில்,அப்பள்ளியின் தலைமையாசிரியர் சேவியர் சந்திரசேகர் மாணவனை அழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்த நாளன்று குடிபோதையில் பள்ளிக்கு வந்த விக்னேஷ் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று அவரை தலையில் தாக்கி காயப்படுத்தி உள்ளான்.
படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவத்தை அறிந்த கண்டமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் பள்ளி மாணவன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளான்.
ஏற்கனவே அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்க பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பள்ளி மாணவன் போதையில் தலைமையாசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.