Categories: தமிழகம்

தலைக்கேறிய போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்.. அரசு பேருந்தை மறித்து அடாவடி.. ஷாக் வீடியோ!!

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலை எந்நேரமும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் இடமாகும்.

இந்தசாலையில்  சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் வாகனங்களை மறித்தும், டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களை ஆபாச வார்த்தைகளால் வசை பாடியும் ரகளையில் ஈடுபட்டு வருவதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து நகராட்சி சந்தை பகுதிக்கு சென்ற போலீசார் பார்த்த போது அங்கு ஒரு பெண்  டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு, போதை தலைக்கேறிய நிலையில் கலாட்டாவில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனடியாக அப்பெண்ணை போலீசார் அப்புற படுத்த முற்பட்டபோது போலீசாரின் முயற்சி பலனளிக்கவில்லை. போலீசாரிடம் திமிறி சென்ற போதை பெண் அங்கு வந்த அரசு பேருந்தை நிறுத்தி, அதன் மீது ஹாயாக சாய்ந்து கொண்டு போலீசார் சொல்வதை கேட்க்காமல் அடம் பிடித்தார்.

மேலும் அங்கு சென்ற காரை மடக்கியவர் காரின் சாவியை எடுத்து கொண்டு சென்றார். போலீசாரையும் கையை பிடித்து இழுத்து வசை பாடினார். 

போலீசாரிடம் எனக்கு குவாட்டர் கொடுத்தால் தான் வருவேன் எனவும், தலை வலி வராத எக்ஸ்பிரஸ் ரக பிராந்தி தான் வேண்டும் என அடம்பிடித்தார்.

பின் அவரை சமாதானம் செய்த போலீசார் வேறு வழியில்லாமல் குவாட்டர் வாங்கி வர சொல்ல, லாவகமாக ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

போலீசாரின் விசாரணையில் அப்பெண் திருப்பூர் கலைஞர் நகரை சேர்ந்த மகேஷ்வரி என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவிற்கு அடிமையானதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் இது போல கலாட்டாவில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பின்னர் பெண் போலீசார் அவரை நன்கு கவனித்து, பின்னர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். காங்கேயத்தில் குடிபோதையில் பெண் ஒருவர் அரசு பேருந்து மறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\

மேலும் போதையில் பெண் ரகளை செய்யும் வீடியோக்கள் காங்கேயம் பகுதிகளில் வாட்ஆப் மற்றும் பேஸ்பூக் போன்ற வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

14 minutes ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

22 minutes ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

1 hour ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

1 hour ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

2 hours ago

This website uses cookies.