கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஸ்டார் ஓட் டல் முன் 4 பேர் உயர்ரக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை நிறுத்தி அதில் இருந்து இறங்கி 4 பேர் போதையில் தள்ளாடியபடி நேற்றிரவு ஓட்ட லுக்கு செல்ல முயன்றனர்.
அப்போது ஓட்டல் முன் இருந்த செக்யூரிட்டி விவரங்களை கேட்டார். அப்போது அவர்கள் டிஜே பார்ட்டியில் பங்கேற்க செல்வதாக கூறினர். அப்போது அவர் ஜோடியாக இருந்தால் பார்ட்டிக்கு செல்ல முடியும். உங்களுக்கு அனுமதி கிடையாது எனக்கூறினார்.
கோபமடைந்த அவர்கள் தகராறு செய்தனர். இதை பார்த்த ஓட்டல் நிர்வாகத்தை சார்ந்த பவுன்சர்கள் அங்கே குவிந்தனர். தகராறு செய்த 4 பேரையும் விரட்டி னர்.
இந்நிலையில் காருக்கு சென்ற 4 பேரும் கத்தியுடன் மீண்டும் ஓட்டலில் நுழைய முயன்றனர். அவர்களை பவுன்சிலர்கள் கட்டையுடன் விரட்ட முயன்றனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ரோட்டின் முன் நின்று தகராறில் ஈடுபட்டனர். இதை சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். தகவல் அறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
ஓட் டல் நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட் டது. காரில் வந்தவர்கள் மீது ஓட்டல் நிர்வாகம் புகார் தர முன் வரவில்லை. போலீசார் காரில் வந்தவர்கள் போதையில் இருந்ததால், விவரங்களை பெற்று அனுப்பி வைத்தனர். இவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.