ஆம்பூர் அருகே கோவில் திருவிழாவில் குடிபோதையில் இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டதை தடுத்து நிறுத்திய பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியில் எட்டியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவானது, இரண்டு தினங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று திருவிழாவை ஒட்டி மாலை ஆலய திடல் அருகே மெல்லிசை கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மேலும் படிக்க: டூவீலருக்கு 28% ஜிஎஸ்டி வரி தேவையா..? மத்திய அரசு மீது ராஜீவ் பஜாஜ் கடும் விமர்சனம்..!!!
இதில் வாலிபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனை அங்கு உமராபாத் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் லட்சுமி பாதுகாப்பு பணியில் இருந்த போது, அவரிடம் தகராறு செய்யாமல் ஓரமாக இருக்குமாறு கூறியுள்ளார். அப்போது, அந்த போதை இளைஞர் எதிர்பாராத விதமாக, உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டு, அவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், அவர் தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கணேசன் (28) என்பவர் என தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் திருவிழாவின் போது நடைபெற்ற இன்னிசை கச்சேரியில் போதை இளைஞர் பெண் உதவி காவல் ஆய்வாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.