வேலூர் : மதுபோதையில் பள்ளிக்குள் நுழைந்து குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்க முயன்ற நபரை தடுத்த தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த பெருமுகை பகுதியிலுள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வராஜ் மதுபோதையில் வந்து வகுப்பறையில் உள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்க முயன்றுள்ளார். அதை ஆசிரியர்கள் தடுத்தபோது செல்வராஜ் ஆசிரியர்களிடம் கலாட்டா செய்துள்ளார். அப்போது, மாணவர்கள் அலறி கூச்சலிட்டுள்ளனர்.
தகவலறிந்த தலைமையாசிரியர் பால்ராஜ், கலாட்டா செய்து கொண்டிருந்த செல்வராஜை பள்ளியை விட்டு வெளியே செல்லும் படியும் மாணவர்கள் பயப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். வெளியே செல்லாத செல்வராஜ் தலைமையாசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
அதில், தலைமையாசிரியர் அணிந்திருந்த கண் கண்ணாடி உடைந்து முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் பால்ராஜ் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்குள் நுழைந்து தலைமை ஆசிரியரை போதை ஆசாமி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.