ஆலப்பூழாவில் இருந்து தான்பாத் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மது போதையில் இருந்த நபர் ஒருவர் ரயிலின் மீது ஏறி அமர்ந்ததால் பரபரப்பு நிலவியது.
ஆலப்புழாவில் இருந்து சேலம் வழியாக தான்பாத் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை சென்றது. அப்போது, பொம்மிடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் நின்றபோது, அதே ரயிலில் பயணித்த 45 வயதுடைய நபர் ஒருவர், மதுபோதையில் ரயிலின் மீது ஏறி தவழ்ந்து சென்று அமர்ந்துக்கொண்டார்.
இது அங்கிருந்த ரயில் பயணிகளிடையே ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பொம்மிடி ரயில் நிலைய அதிகாரிகள் ரயில்வே போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில், அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயிலின் மீது ஏறி அமர்ந்த நபரை மீட்டனர். பின்பு அதே எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் ரயில் நிலையத்திற்கு அந்த நபரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் சுமார் பத்து நிமிடம் எக்ஸ்பிரஸ் தாமதமாக நின்று சென்றது.
இந்த நபர் ரயிலின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாரா..? அல்லது மது போதையில் ரகளை ஈடுபட்டாரா..? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.