தர்மபுரி ; சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையிடம் குடிபோதையில் இருந்த நபர் செய்த செயல் வைரலான நிலையில், வனத்துறையினர் ஆக்ஷனில் இறங்கியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையில் போதையில் இருந்த நபர் ஒருவர் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த காட்டு யானைக்கு வணக்கம் தெரிவித்தும், இரண்டு கைகளை தூக்கியவாறு அதனை வணங்குவது போன்று யானையை அச்சுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
வழக்கமாக யானைகள் மனிதர்களை துரத்தும் அல்லது சில யானைகள் மனிதர்களை தாக்கும். ஒகேனக்கல் சாலையோரம் இருந்த இந்த யானை போதையில் இருந்த நபரை எதுவும் செய்யாமல் அவர் செய்த சேட்டையை பொறுத்துக் கொண்டு அங்கிருந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது
இந்தநிலையில், அந்த வைரல் வீடியோவை வைத்து அந்த நபர் யார் என வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குட்டையை சேர்ந்த மீசை முருகேசன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரை தற்போது கைது செய்த வனத்துறையினர் அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.