தர்மபுரி ; சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையிடம் குடிபோதையில் இருந்த நபர் செய்த செயல் வைரலான நிலையில், வனத்துறையினர் ஆக்ஷனில் இறங்கியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையில் போதையில் இருந்த நபர் ஒருவர் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த காட்டு யானைக்கு வணக்கம் தெரிவித்தும், இரண்டு கைகளை தூக்கியவாறு அதனை வணங்குவது போன்று யானையை அச்சுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
வழக்கமாக யானைகள் மனிதர்களை துரத்தும் அல்லது சில யானைகள் மனிதர்களை தாக்கும். ஒகேனக்கல் சாலையோரம் இருந்த இந்த யானை போதையில் இருந்த நபரை எதுவும் செய்யாமல் அவர் செய்த சேட்டையை பொறுத்துக் கொண்டு அங்கிருந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது
இந்தநிலையில், அந்த வைரல் வீடியோவை வைத்து அந்த நபர் யார் என வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குட்டையை சேர்ந்த மீசை முருகேசன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரை தற்போது கைது செய்த வனத்துறையினர் அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.