கோவை : கோவையை அடுத்த பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே போதை இளைஞர் செய்த அட்ராசிட்டி சம்பவம் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததை கண்ட போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, அந்த இளைஞர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆத்திரமடைந்த போதை இளைஞர், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டிய இளைஞரை கண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் திகைத்து நின்று வேடிக்கை பார்க்க துவங்கினர்.
செய்வதரியாது திகைத்து நின்ற போலீசார் இளைஞரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அடங்காத போதை இளைஞரால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. பின்னர் அங்கிருந்த போலீசார் போதை இளைஞரை அதிவிரைவு படை வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது.
மாற்று திறனாளி என்பதால் அறிவுறை கூறி அந்த இளைஞரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.