விருத்தாசலம் அருகே அரசு பேருந்தின் படியில் ஏறி உட்கார்ந்து அலப்பறை செய்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து அகரம் மற்றும் ஆலம்பாடி வழியாக சேத்தியாத்தோப்பு செல்லும் அரசு பேருந்து தடம் எண் 31 பஸ் நிலைத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது,
ஸ்டேட் பேங்க் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்ற பஸ் நின்றபோது, திடீரென்று மது போதையில் இருந்த ஆசாமி ஒருவர் அரசுப் பேருந்தின் படியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். கண்டக்டர் அவரை உள்ளே ஏற சொன்ன போது போதை ஆசாமி மேலே ஏறாமலும், கீழேயும் இறங்காமலும் படியில் உட்கார்ந்து கொண்டு அலப்பறையில் ஈடுபட்டார்.
இதனால் அரசு பேருந்தின் நடத்துநருக்கும், போதை ஆசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் பேருந்தின் ஓட்டுனர் ஸ்டேட் பாங்க் அருகிலுள்ள பஸ் நிறுத்தம் அருகிலேயே நிறுத்திவிட்டு அருகிலிருந்த போலிஸ் பூத்தில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.
பின்னர் அங்கு வந்த காவலர் படியில் அமர்ந்திருந்த மது போதை ஆசாமியை கீழே இறக்கி பஸ்ஸை அனுப்பி வைத்தார். தொடர்ந்து, போதை ஆசாமியிடம் போலீசார் அவரது முகவரியை கேட்டு புகைப்படம் எடுக்கும் போது, “ஐயோ ஐயோ என்ன போட்டோ எடுக்காதீர்கள்,” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார். போதை ஆசாமியால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
This website uses cookies.