செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த கணவன், போலீஸில் சரணடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைபாடி பகுதியை சேர்ந்தவர் விஜி (34). இவருக்கு செல்வி (30) என்ற மனைவி உள்ளார். மனைவியின் நடத்தையின் மீது சந்தேகத்தால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த விஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அருகில் வைத்திருந்த சுத்தியை எடுத்து செல்வியின் தலையில் பயங்கரமாக அடித்துள்ளார் விஜி. இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார். பின்னர் மேல் செங்கம் காவல் நிலையத்தில் கணவர் விஜி சரண் அடைந்தார்.
இது குறித்து மேல் செங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவன் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.