திண்டுக்கல் அருகே வேடசந்தூர் அருகே மதுபோதையில் நடுரோட்டில் நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட மதுபோதை ஆசாமியால் செய்வதறியாது போலீசார் திகைத்து போகினர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு கரூர் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்திய போதை ஆசாமி ஒருவர் மதுபான கடையின் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் முன்பு நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த மது போதை ஆசாமியிடம் விசாரணை நடத்தும்போது மது போதையில் மட்டையானது போல் நடித்துள்ளார். இதனை நம்பிய காவல் துறையினர் மது போதை தெளிந்த உடன் இந்த இடத்தை விட்டு சென்று விடுவான் என நினைத்து அங்கிருந்து புறப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து அந்த மது போதை ஆசாமி காவல்துறையினர் அருகில் இல்லாததை அறிந்து மீண்டும் ரகளை செய்யத் தொடங்கினார். பின்பு மீண்டும் அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் மது போதை ஆசாமியை அடக்க எவ்வளவு முயற்சி செய்தும், அவர் அங்கிருந்து சாலையில் வேகமாக நடந்து சென்றார்.
பரபரப்பான சாலையின் நடுவே வாகனங்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்த குடிபோதை ஆசாமி திடீரென தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக நின்று கொண்டு, ‘இப்ப வாங்கடா பாத்துக்கலாம்’ என்று கத்தியபடி சாலையில் படுத்துவிட்டார். இதனை பார்த்த அங்கிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் முகம் சுளித்து அங்கிருந்து சென்றனர்.
பின் தொடர்ந்து வந்த சார்பு ஆய்வாளர் பாண்டியன் அங்கு இருந்தவர்களின் கைலி ஒன்றை வாங்கி போதை ஆசாமியின் உடம்பில் சுற்றி அருகிலுள்ள கட்டடத்திற்கு சக காவல்துறையினரின் உதவியோடு ஒரு வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
சாலையின் நடுவே நிர்வாணமாக ஓடிய குடிபோதை ஆசாமியால் வேடசந்தூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.