தூத்துக்குடி: மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய ரவுடி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலம் கீழே சரக்கு ரயிலில் அடிபட்டு மூன்று பேர் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், அங்கு ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பணகுடியை சார்ந்த ஜெபசிங் (27) என்பவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, ரயிலில் அடிபட்டு கிடந்த இருவரது உடலை மீட்ட ரயில்வே இருப்பு பாதை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் மது போதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரிய வந்தது. இதில், மூக்கில் பலத்த காயத்துடன் அடிபட்டு இறந்து கிடந்த திரு.வி.க. நகரைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரது மகன் மாரிமுத்து (23) என்பதும், இவர் மீது தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது.
இதுதொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தவர் என்பது தெரியவந்தது. அவருடன் தூத்துக்குடி பசும்பொன் நகரைச் சார்ந்த காளிபாண்டி என்பவரது மகன் மாரிமுத்து என்பவரும் மது போதையில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து உறங்கியுள்ளார். அவரது கழுத்தின் மேல் ரயில் ஏறியதில் அவரது கழுத்து துண்டானது இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் அவரும் பலியானார்.
இவர்கள் மூன்று பேரும் நேற்று இரவு பாலத்தின் அடியில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்பொழுது மதுபோதை அதிகமானதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் எழுந்திருக்க முடியாமல் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரியவந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆந்திரா செல்லும் சரக்கு ரயிலில் இவர்கள் மீது ஏறியதில் சம்பவ இடத்தில் மாரிமுத்து என்ற பெயருடைய இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஜெப சிங் என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து ரயில்வே இருப்பு பாதை ஆய்வாளர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.