சிவகங்கை அருகே பாதுகாப்பு பணிக்கு மதுபோதையில் வந்த காவலர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே பனங்காடி சாலையில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் தங்கும் விடுதியான தாய் இல்லம் அமைந்துள்ளது. இங்குள்ள நிர்வாகிக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, ஒரு காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பாதுகாப்புக்கு வந்த காவலர் மது போதையில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து மிரட்டி கையூட்டு வாங்கியதாக கூறப்படுகிறது. மது போதையில் காவலர் மிரட்டி வசூல் செய்ததை வாகன ஓட்டிகள் சிலர் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் மது போதையில் வாகன ஓட்டிகளை மிரட்டி வசூல் செய்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இதுபோன்ற ஒரு சில காவலர்களின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.
எனவே இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.