கடலூர் : விருத்தாசலம் அருகே மாவட்ட வருவாய் அதிகாரி மது போதையில் ஆய்வுக்கு வந்ததால் பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வமான அக்கினி வீரன் அப்பகுதியில் சாலையோரம் வைத்து வழிபாடு செய்து வந்தனர். தற்போது சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறையினர் அக்கினி வீரனை அகற்றக்கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அதன் அருகிலேயே அரசு புறம்போக்கு இடத்தில் குலதெய்வம் அக்கினி வீரனை வைத்து வழிபாடு செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று திடீரென கடலூர் மாவட்ட வருவாய் நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆய்வு செயய வந்துள்ளார். இதனை கருவேப்பலங்குறிச்சி கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஷ்ணன் மது போதையில் இருப்பதை தெரிந்து கொண்டு கேட்டுள்ளனர். சுதாரித்துக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கிருஷ்ணன் காரில் ஏறி மின்னலோக வேகத்தில் அங்கிருந்து பறந்து சென்றுள்ளார்.
அப்பகுதி பொதுமக்கள் காரை நோக்கி கூச்சலிட்டு விரட்டி அடித்துள்ளனர். இதுபோன்று அரசு உயர் பதவியில் இருக்கும் அதிகாரியே மதுபோதையில் ஆய்வுக்கு வருவது மிகவும் கேவலமாக இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.