திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் இரும்பு கம்பியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி சுற்றித் திரிந்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளதால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பகுதியாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பொதுமக்கள் வெளியே வருவதால் கூட்டம் இருமடங்காக இருக்கும்.
இந்நிலையில் நேற்று மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வந்தது. மாலை வேளையில் மது போதையில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் கையில் இரும்பு கம்பியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி சுற்றித் திரிந்தார். மேலும் வழியில் நின்றிருந்த ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் இளைஞரை தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கி உள்ளார். இதனால் பொதுமக்கள் இணைந்து வடமாநில இளைஞரை தடுத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து காயமடைந்த இளைஞரிடம் விசாரித்த போது அவர் சஞ்சித் (33) என்பது தெரியவந்தது. மேலும் அதீத போதையில் இருந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.