பழனி பேருந்து நிலையம் அருகே மது போதையில் சுயநினைவின்றி பெண் ஒருவர் சாலையில் படுத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர். இந்த பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்று திரியும் பெண்கள், பொதுமக்களிடம் யாசகம் பெற்று அந்த பணத்தில் மது அருந்தி விட்டு போதையில் சுற்றித் திரிகின்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் 25 வயது பெண் ஒருவர் கடும் மது போதையில் சாலையில் தள்ளாடி படி நடந்து வந்துள்ளார். அப்போது போதையில் உச்சத்தில் சென்ற அவர் நிலை தடுமாறி சாலையிலேயே சுயநினவின்றி ஆபத்தான நிலையில் படுத்துவிட்டார்.
சாலையில் சென்றவர்கள் பெண்ணை விபத்தில் சிக்கி இருப்பாரோ என்ற கோணத்தில் அவரை எழுப்ப முயன்ற போது, அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்தப் பெண்ணை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பெண் ஒருவர் மது போதையில் சுய நினைவின்றி சாலையில் படுத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.