விருதுநகர் : ராஜபாளையத்தில் குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தட்டி கேட்ட முதியவர் மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் பிள்ளையார். 55 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்திருக்கிறார். இன்று மதியம் இதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜ் என்ற இளைஞர் குடிபோதையில், அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தனக்கு தொந்திரவு ஏற்படவே, பிள்ளையார் அந்த இளைஞரை சத்தம் போட்டு அங்கிருந்து விரட்ட முயன்றுள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முதியவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மயங்கி சரிந்துள்ளார். இதை பார்த்த பிள்ளையாரின் மகள் மதீஸ் அனிதா, தாக்குதலை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு இசக்கி ராஜ் அங்கிருந்து தப்பி விட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையில் வைத்து காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர் தப்பி ஓடிய இசக்கி ராஜை தேடி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.