கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் விவேகானந்தன் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை சந்திப்பில் மனநலம் பாதித்த ராஜ என்பவரிடம் இரண்டு வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, அங்கு கீரிப்பாறை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் விவேகானந்தன் இந்த சம்பவத்தை கண்டு வாலிபர்களை தடுத்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த இரு வாலிபர்களும் காவலரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த காவலர் விவேகானந்தனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாக்குதல் நடத்திய குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நாகர்கோவிலை சேர்ந்த சொர்ணராஜ் மற்றும் ஜெரின்ராஜ் இருவரையும் பொதுமக்களும் தாக்கி உள்ளனர்.
இதனால் அவர்களும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களும் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்த புகாரின் பேரில் சொர்ணராஜ், ஜெரின் ராஜ் ஆகிய இருவர் மீதும் கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.