கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் விவேகானந்தன் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை சந்திப்பில் மனநலம் பாதித்த ராஜ என்பவரிடம் இரண்டு வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, அங்கு கீரிப்பாறை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் விவேகானந்தன் இந்த சம்பவத்தை கண்டு வாலிபர்களை தடுத்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த இரு வாலிபர்களும் காவலரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த காவலர் விவேகானந்தனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாக்குதல் நடத்திய குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நாகர்கோவிலை சேர்ந்த சொர்ணராஜ் மற்றும் ஜெரின்ராஜ் இருவரையும் பொதுமக்களும் தாக்கி உள்ளனர்.
இதனால் அவர்களும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களும் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்த புகாரின் பேரில் சொர்ணராஜ், ஜெரின் ராஜ் ஆகிய இருவர் மீதும் கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.