பாஜக அழுத்தத்தின் காரணமாகவே பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனது என்று திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ என்று புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ கூறியதாவது :- இன்னும் இரண்டு தினங்களில் நான் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறேன் என்பது குறித்து அறிவிக்கப்படும். புதிதாக கிடைக்கும் சின்னத்தை 24 மணி நேரத்தில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது தற்போது உள்ள டிஜிட்டல் உலகத்தில் இது சாத்தியமானது.
வாக்குச்சீட்டில் சின்னங்கள் தான் முக்கியத்துவம் பெறும். கிராமப்புறங்களில் சின்னத்தை வைத்து தான் வாக்களிக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் 24 மணி நேரத்திற்குள் எனக்கு கிடைக்கும் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
வேட்பாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் சின்ன முக்கியம் கிடையாது. அந்த நம்பிக்கை மக்கள் மத்தியில் எனக்கு கிடைத்துள்ளது. மதிமுகவிற்கு மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்டிருந்த சின்னம் கிடைக்காமல் போனதற்கு பாஜக காரணம்.
அவர்களுக்கு எதிராக எதிர்மறை கருத்துக் கூறுபவர்களை குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.
ஏற்கனவே, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவைகளை வைத்து எதிர்க்கட்சிகளை முடக்கி வரும் பாஜக, தற்போது தேர்தல் ஆணையத்தையும் அந்த வரிசையில் சேர்த்துள்ளது. திருச்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தை நான் கடந்து செல்லுமாறு தெரிவித்து விட்டேன். தற்போது திமுக எனக்கு நன்றாக ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.
அந்த சம்பவத்தை வைத்து திமுகவை எங்களிடம் இருந்து பிரிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை சிலர் எடுத்து வருகின்றனர், அது நடக்காது. அந்த சம்பவம் கடந்து போய்விட்டது, எனக் கூறினார்.
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.