திருப்பூர் : பத்மாவதி புறத்தை சேர்ந்த ஜானகி ராமன் என்ற இளைஞர் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
திருப்பூர், பத்மாவதி புறத்தை சேர்ந்த மதன கோபால் என்பவரது மகன் ஜானகி ராமன் (வயது 20). கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் மாநகராட்சி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற விரும்பினார்.
அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் பயணம் செய்து, திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனம் தளராத இளைஞர் ஜனநாயக கடமையை ஆற்றியது வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.