புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகத்தில் குடிதண்ணீர் வராததைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெரும் வகையில், தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் அமைத்து சிறப்பான முறையில் செயல்படுத்தி மக்களின் நன் மதிப்பை பெற்றனர். தற்போது, நடந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பல இடங்களில் அம்மா உணவகங்கள் சிறப்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் நிலையில், நல்ல முறையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் செயல்பட்டு வந்த தூய குடிநீர் வழங்கும் ஆர்ஓ பழுதடைந்து, அது சரி செய்யப்படாத காரணத்தினால் உணவகம் முழுவதும் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனை அறிந்த அறந்தாங்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இதனை கண்டித்து முப்பதற்க்கும் மேற்பட்டோர் மாலை மற்றும் மேல தாளத்துடன் கண்டன கோஷங்கள் எழுப்பி, அறந்தாங்கி அம்மா உணவகத்தில் குடிதண்ணீர் வராததால் உணவகத்தில் உள்ள தண்ணீர் டேங்குக்கு அஞ்சலி செலுத்தி, உணவகத்திற்குள் அமர்ந்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு DYFIஜ சேர்ந்த நிர்வாகிகள் கோபால், கவுதம் பாண்டி், காதீர், சங்கர், தினேஷ் காளிதாஸ், கவி பாலா, கருணா, தங்கராசு, தென்றல் கருப்பையா உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.