ஈரோடு : சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டில் பொதுமக்கள் வாக்களிக்க வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்கு பதிவு செய்ய சுமார் 50 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கு உண்டான வாக்குப்பதிவு தொடங்கி வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 23வது வார்டில் உள்ள பொதுமக்கள் வாக்கு பதிவு செய்ய வைத்திருந்த வாக்கு இயந்திரம் பழுதடைந்து சுமார் 50 நிமிடங்கள் கழித்து சரிசெய்யப்பட்டது.
இதனால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வாக்கு இயந்திரம் பழுதடைந்து 50 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதால் அந்த வார்டில் மட்டும் வாக்களிக்கும் நேரம் 50 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.