ரூ.3 ஆயிரம் மின்கட்டணத்திற்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்ததை கேட்ட மூதாட்டியை அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – அண்ணா நகரைச் சேர்ந்த ரமணி என்பவர் வீட்டிற்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாத பயன்பாட்டு அடிப்படையில் ரூ.3,380 மின்கட்டணமாக விதிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக மின்சார வாரியம் கொடுத்த காலக்கெடுவுக்குள் மின்கட்டணத்தை ரமணியால் செலுத்த முடியவில்லை.
மின்கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டிக்கவில்லை. இதையடுத்து, மே, ஜுன் மாதங்களில் பயன்பாட்டின் அடிப்படையில் ரமணிக்கு ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் 4 ஆயிரத்து 750 ரூபாய் வந்துள்ளது.
இதையடுத்து, மின் கட்டணத்தை செலுத்த மின்சார வாரிய அலுவலகம் சென்றபோது, 17 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தார்.
3 ஆயிரத்து 380 ரூபாய் மின் கட்டணத்திற்கு, 17 ஆயிரம் ரூபாய் அபராதமா என மின்வாரிய அலுவலகத்தில் வயதான பெண்மணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், இது தொடர்பாக கேள்வி கேட்டால், போலீஸில் பிடித்து கொடுத்து விடுவோம் என மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.