Categories: தமிழகம்

இரவு நேர போக்குவரத்து தடை எதிரொலி : 2வது நாளாக பண்ணாரியில் போக்குவரத்து நெரிசல்.. கொந்தளிப்பில் மக்கள்!!

ஈரோடு : இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதையில் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இலகு ரக வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக செல்ல வந்த அனைத்து கனரக வாகனங்களும் பண்ணாரியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையிலும், பவானிசாகர் செல்லும் சாலையிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

பின்னர் நேற்று காலை 6 மணி முதல் பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கும் இதேபோல் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் இருந்தும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.


இதன் காரணமாக ஒவ்வொரு வாகனத்திலும் முந்திக் கொண்டு சென்றதால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து பின்னர் சுமார் பதினொரு மணிக்கு மேல் ஓரளவு போக்குவரத்து சீரானது.

மேலும் நேற்று மாலை மீண்டும் மாலை 6 மணிக்கு திம்பம் மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப் படாததால் கர்நாடக செல்ல வந்த வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 7 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மீண்டும் இன்று காலை 6 மணிக்கு வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்தும் காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் இருந்தும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதை மற்றும் பண்ணாரி சோதனை சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில், இரவு நேர போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்த போது போக்குவரத்து சரிவர இருந்ததாகவும் தற்போது இரவு நேர போக்குவரத்து தடை செய்ததன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனவும் இதே நிலை நீடித்தால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

12 minutes ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

47 minutes ago

சத்தமே இல்லாமல் உதவி செய்யும் அஜித்… குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு!

ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…

1 hour ago

திமுகவில் 2 விக்கெட் காலி.. இன்னும் பல தலைகள் உருளும்.. பார்த்து ரசிக்கலாம் : ஹெச் ராஜா பகீர்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…

2 hours ago

பிடிச்ச வேலையை என் வாயாலயே வேண்டாம்னு சொன்னேன்- மேடையில் கலங்கிய மணிமேகலை

விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…

2 hours ago

கார் விபத்தில் பிரபல பாடகி சின்னப்பொண்ணு இறந்துட்டாரா? பதறிய கனிமொழி!

தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…

2 hours ago

This website uses cookies.