Categories: தமிழகம்

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல.. தந்திர மாடல் ஆட்சி.. மக்களை ஏமாற்றும் ஆட்சி : இபிஎஸ் சாடல்!!

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல.. தந்திர மாடல் ஆட்சி.. மக்களை ஏமாற்றும் ஆட்சி : இபிஎஸ் சாடல்!!

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திமுக அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் ஒரு விண்ணப்பத்தை கொடுத்து பல்வேறு தகவல்களை நகர பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் விளக்கம் கேட்பது கண்டிக்கத்தக்கது. இதில் குறிப்பாக கட்டணமில்லா பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் உள்ளிட்ட விவரங்களை கேட்பது கடும் கண்டனத்துக்குரியது.

உலகில் எங்கேயும் பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் எவரிடமும் எந்த அரசும் இதுபோன்ற கேள்விகளை கேட்டதில்லை. இதனை திமுக அரசு செய்கிறது என குற்றச்சாட்டை முன்வைத்தார். தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதும் நகர பேருந்தில் மகளிர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என் அறிவித்தார்கள். ஆனால், அறிவிப்பின்படி தற்போது நடக்கவில்லை.

முன் பக்கம், பின் பக்கம் பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்த நகர பேருந்தில் பெண்கள் ஏறினால் தான் கட்டணமில்லாமல் செல்ல முடியும். மற்ற நகர பேருந்துகளில் ஏறினால் கட்டணம் செலுத்த வேண்டும். ஆகவே, தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி, மக்களை ஏமாற்றும் திமுக ஆட்சி. இந்த சுழலை கட்டணமில்லா பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் சாதி குறிப்பிட்டு கேட்பது, தொலைபேசி எண்ணை கேட்பது கண்டிக்கத்தக்கது.

இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதையெல்லாம் இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, இனியாவது எதிர்க்கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொண்டு தீர்வு காணவேண்டும் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். இதுபோன்று, முறையான பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும்.

டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் வழங்க வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் வழங்க வேண்டும். கடன் வாங்கி தான் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றியுள்ளது. திமுக ஆட்சியில் ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

2 days ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

2 days ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

2 days ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

2 days ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

2 days ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

2 days ago

This website uses cookies.